கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

கடந்து வந்த பாதையில்
<<<<<<<<<<<<<<<<<<<

காலச் சக்கரமும் வேகமாய் சுழன்றதுவே

காரிருள் அகன்று அகமது குளிர்ந்ததுவே

கலக்கமான வாழ்வுகளோ கலைந்தோடும் முகிலாகின

காலமும் இப்போது எம்மைத் தாலாட்டினவே

வாழ்வா சாவா எத்தனை பதட்டங்கள்

வாழ்வின் நிலையிலோ எத்தனை ஒட்டங்கள்

வாழும்போதும் எத்தனை போராட்டங்கள்

வரம்புகள் கடந்ததும் மனமது தேரோட்டம்

உள்ளத்தின் நிலையிலோ ஊமைக்காயங்கள்

உணர்வுகளின் மத்தியிலே விம்மல்களும் வெடிப்புக்களும்

ஊனங்கள் எத்தனையோ அவலமாயும் சுழ்ந்ததுவே

உணர்வகளெல்லாம் ஒசையின்றி அழுததுவே

நடக்கும் என்பது ஒன்றுமே இல்லையே

நம்மையும் அறியாமல் எத்தனையோ நடந்ததுவே

நாடும் நகரமும் இடியும் மின்னலும்

நாதியற்ற ஊர்வலத்தின் எல்லையில்லாத பயணமுமே

தேடியதும் ஒன்றுமில்லைக் கைகளிலே
தேயாத நிலவும் வான்மீதில் இல்லையே

தேய்பிறை போன்றே தேய்ந்துமே நின்றபோதும்

வளர்பிறை போன்றே வண்ணமாக மிளிர்ந்தோமே.

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading