சிவரூபன் சர்வேஸ்வரி.

தியாகமே, தீர்ப்பானதா?

இனிமையான காலங்களென்று
இலை மறை காயாக நின்று
இலட்சிய வேட்கை கொண்டு
இலகுவாய் மறைந்தது தியாகம்

காளிக்குப் போட்டனர் களப்பலி
களியாட்டத்திற்குப் போட்டனர் நரபலி
கலங்கரை விளக்குகளெல்லாம்
கடுகதியில் சாய்ந்தது அது ஒரு தியாகம்

தீர்ப்பிற்கு தீர்வு திருத்த முடியாத சட்டங்கள்
தினம் தினம் மாறும் திரிவு கொண்ட செயற்பாடுகள்
கேட்பாரற்ரு அந்த தர்மங்கள் விழ்ந்திட
காப்பாற்ற தியாகங்கள் சுடர் விட
மீட்பாரின்றி மிடிமைகள் குவிந்தன
மிகை, மிகையாக ஓடங்கள் சரிந்தன
மிதந்தது நடுக்கடலிலே துடுப்பில்லாக்
கப்பலொன்று
மானமே மான்புமிகு வீரமென்று

படைப்பு இதுவென பரமன் எழுதிவிட்டான்
பரணிமாதாவும் கைவிரித்து நின்றுவிட்டாள்
பாகமொன்றாய் பரணியில் சூழ்ந்தது
தியாகங்களெல்லாம் தீர்ப்பாக சரிந்தனவே,

-கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading