” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

.சந்த கவி
இலக்கம்_ 155

“அத்திவாரம்”
தந்தையும் தாயும் போட்ட அத்திவாரம்
கட்டிடம் சரியாக எழும்பி
ஆலமரத்தின் ஆணி
வேர்கள்
நாம் நிமிர்ந்து நிற்கின்றோம் உயர்ந்து
நிக்கின்றோம் !

தர்மத்தின் தலைவன் தந்தை
தாய்தேசத்தின் ஊற்று
தாய்மை
நிறைந்த உள்ளம் அன்னை
தன்மானத்தின் தோற்றம்!

தேடி வைத்த சொத்து
தேர்ந்து எடுத்த முத்து
தேசம் கடந்தாலும்
தேய்ந்து போகாத முத்து!

பத்து பிள்ளைகளை
பக்குவப்படுத்தி
பத்தியம் காத்து
பத்ததி சொல்லி வளர்த்த
பெருமைக்குரிய பெற்றவர் போட்ட அத்திவாரம்
சரியாக இருந்தமையால்
கட்டடம் தடுமாறாமல்
தளம்பாமல் எழும்பியது
இதை பேணி
பாதுகாப்பது
எம் பொறுப்பு
எம் துறப்பு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
06.07.24

Nada Mohan
Author: Nada Mohan