பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__ 100

” தீ ”
ஆதி மனிதன்
ஆனந்த தீ மூட்டி
சுட்டு எரித்து
சுவையாய் உண்டு மகிழ்ந்தான்

அம்மா அடுப்பு மூட்டி
விறகு எரித்து
ஊது குழலில்
ஊதி உரசி

மூச்சுக்கு ஒரு பயிற்சி
வீச்சாய் சமைத்த
நெல்லரிசி சோறு
நெய் மணக்கும்
கத்தரிக்காய்
சம்பல் சாம்பாறு
தணலில் வெந்து வேகிய உணவு
சாப்பிட சேட்டயாய் இருக்குதே

காட்டு தீ
கனல் கொள்ளுமே
அனலாய் பரவி
அனர்த்தத்தை தருமே

செய்திகள்
வேகமாய் பரவி
தீயாய் பறந்து
தீக்குமே மனதை!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading