” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 141

“பெண்மையை போற்றுவோம்”

தச அவதாரத்தையும் தவமென நினைத்தவள் பத்தியம் காத்தவள் பட்டினி கிடந்தவள்
பட்டது தொட்டது கொஞ்சமா நெஞ்சமா

சேலையில் தொட்டில் கட்டி தொட்டிலை ஆட்டி
சேந்து இருந்து வாழ்ந்த வாழ்க்கை
சேற்றில் கால் வைத்து
சோற்றில் கை வைத்த பெண்!

தன் குழந்தையை
தோழியிடம் கொடுத்து கண்ணியம்
பெண்ணியம் காத்து
போர்களத்தில் களமாடி மடிந்த வீரப்பெண்கள்!

கணவன் வித்துடலை
தோழ்களில் சுமந்து
விதைத்தையிட்டு
விரைவாய் குழந்தைகளை அணைத்தபடி மக்களுடன் மக்களாய்
வீரமுடன் வந்த வீரப்பெண்!

உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும் வீரப் பெண்கள்!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan