நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 141

“பெண்மையை போற்றுவோம்”

தச அவதாரத்தையும் தவமென நினைத்தவள் பத்தியம் காத்தவள் பட்டினி கிடந்தவள்
பட்டது தொட்டது கொஞ்சமா நெஞ்சமா

சேலையில் தொட்டில் கட்டி தொட்டிலை ஆட்டி
சேந்து இருந்து வாழ்ந்த வாழ்க்கை
சேற்றில் கால் வைத்து
சோற்றில் கை வைத்த பெண்!

தன் குழந்தையை
தோழியிடம் கொடுத்து கண்ணியம்
பெண்ணியம் காத்து
போர்களத்தில் களமாடி மடிந்த வீரப்பெண்கள்!

கணவன் வித்துடலை
தோழ்களில் சுமந்து
விதைத்தையிட்டு
விரைவாய் குழந்தைகளை அணைத்தபடி மக்களுடன் மக்களாய்
வீரமுடன் வந்த வீரப்பெண்!

உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும் வீரப் பெண்கள்!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan