” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 269 ]
“பாமுகமே வாழி”

தாய்மொழியின் தடைதகர்க்க புறப்பட்டசேய்கள்
பெற்றதாயை புறந்தள்ளுவார், தள்ளார்தாய்மொழி அவலம்
புலம்பெயர்ந்து தேசதில் உதித்த தமிழன்னை
தமிழை மறவா தலைநிமிரும் பாமுகமே நீ பல்லாண்டு வாழி!

இனியென்ன தமிழ்! இடருக்குள்தாங்கிப்பிழைக்குமா?
காப்பதென் கடன்என்றே களத்திலிறங்கியதமிழன்பர்
வாடாமல் வானொலியில் தமிழ்பரப்பிய நடாமோகன்
இன்றும் எத்தனை தமிழ் நெஞ்சங்கள் உங்களைவாழ்த்தும் !

பாமுகமே நீ வாழி பணியுடன் பயணிக்கும் உறவுகளே வாழி!
தமிழமுதம்உதிரத்திற்கலந்து உயிராய்போற்றும் தமிழர்
தொன்மை இனிமை முதன்மைத்தமிழை மூழ்கடிக்கவிடுவரா?
சிறுவர் முதல் முதியோரவரை கலந்து மகிழும் பாமுகம்

ஒரு முறை தவறினும் தாங்கொணார் போராடத் துடிப்பர்
பார்த்தால் பசி தீரும் பருகினால் சுவை ஏறும்
தமிழ் வளர்க்கும் பல்சுவை நிகழ்ச்சியாய் பாமுகம்
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிப்புகழும் பாமுகமே

இன்று இருபத்தேழாண்டு பூர்த்தியடையும் பாமுகம்
நீ மேலும் வளர்வாய் பாமுகமே நீ நீடூழி வாழி!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan