” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 271 ]
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 271 : “நடிப்பு”

தன்னகத்தே கொண்ட தாழ்மையை மறைக்கும் நடிப்பு
பிறரிடம் காணும் திறன்களை பிரதிபலிக்கும் நடிப்பு
நடிப்பெனப்படுவது சிலரிடமே உள்ளதனிச்சிறப்பு
உலகமே ஒரு நாடகமேடை, நடிக்காத மாந்தருமுண்டோ கூறு!

நடிப்பால் உயர்ந்தவர் சிலரே உலகிலின்று
மக்களும் அவரைப்போற்றுகின்றார் நெஞ்சில் வைத்து!
இலட்சியத்தோடு வாழ்ந்த நடிகர்களும் நம்மிலுண்டு
நல்லதையே போதித்தவரும் அவர்களிலுண்டு

வயிற்றுக்காக வாழ்நாள் முழுவதும் நடிப்பவருண்டு
இனம்காணுந்திறனோ இன்று மக்களிடம் நிறையவுண்டு
ஏமாற்ற முடியாத மக்கள் கூட்டம் இன்று அதிகமுண்டு
ஏமாற்ற ஆளில்லையேல் நடிப்புக்கேது இடமுண்டு?

ஆயிரம் வளர்ந்த நாடுகள் இன்று உலகிலுண்டு
ஆனாலும் லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடுதல்கண்டு
அறிவுடை மக்கள் நெஞ்சம் கலங்குவதுண்டு
ஆட்சியாளர் நடிப்பா? மக்கள்உதாசீனமா?

வேண்டாமே இந்தப்பொல்லாத நடிப்பு!
என்று திருந்தும் இப்பொல்லாத உலகம்?
என்று ஒழியும் ஆட்சியின் அராஜகம்?
மக்கள்போராட்டத்தாலே ஒழியும் ஏமாற்று நடிப்பு!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan