திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம்-273 ]
“விடுமுறை”

பள்ளிப்பருவ ஞாபகம் என்றாலே விடுமுறை
சிறுவனாய் மகிழ்ந்து திரிந்ததைமறக்கா விடுமுறை
வார முடிவில் வருமந்த இருநாட்கள் விடுமுறை
பருவமுடிவில் தவறாதுவரும் தவணை விடுமுறை

அடிக்கடிவந்துபோகும் பண்டிகைவிடுமுறை
மொத்தவருடத்தில் அரைவாசி ஆனந்த விடுமுறை
இழக்க மனம் வருமா விடுமுறை தரும் பேரின்பம்?
அடிமையாய் ஓய்வின்றி உழைத்ததும் மறக்குமா?

தொழில்புரட்சி இல்லையேல் மாறுமா இவ்அவலம்?
எட்டுமணிநேரவேலை இளமையிற் கல்வி கிட்டுமா?
விலங்குகள் கூட உடல்களைத்தபின் ஆறும்
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த ஓய்வில்லா அராஜகம்?

சிந்திக்கத்திறன் இருந்தும் பிறரைநம்பாத தன்மை
போராட வலுவிருந்தும் சேர்ந்துசெயற்படாப்பான்மை
சுதந்திரம் என்பது சும்மாகிடைப்பதில்லை
போராடிப்பெறும் விடுமுறைச்சலுகைகள்.
நம்பவேண்டியவிடுமுறையின் வளர்ச்சிப் படிகள்!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading