” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 277 ]
“வலி”

வலி தோன்ற ஒரு நொடி போதும்
மறுகணமே அது மறையவும் கூடும்
ஆறாத ரணமாய் தொடரவும் கூடும்
மரணத்தைத்தருவது போலவும் தோன்றும்

பாசத்தைக்காட்டி மோசம் செய்தலும்
நம்பிய நண்பனுக்கு துரோகமிழைத்தலும்
கட்டிய மனைவி கைவிட்டுச்செல்வதும்
மரணவலிதரும்வகையினதாகும்

பிறரைச்சார்ந்து வாழ்தல் மனிதனின் பேதமையாகும்
வெளிச்சமுள்ளவரை நிழல் தொடர்வது வழமையாகும்
பிறர் வாழ்வை பிரதிபண்ணல் வேதனையில் முடியும்
அழகைக்காண அலைதல் மடமையாகும்

காணும்காட்சியில் அழகை உணர்வது அறிவுடமையாகும்
அடைவதில் திருப்திகாணல் வாழ்க்கையை அழகாக்கும்
விழுபவனைத்தாங்க எவரும் முன்வரமாட்டார்
எழுந்தவனை விழுத்த சிலர் தயங்கமாட்டார்

வலியில்லா வாழ்க்கை மனிதனுக்கு கிடைப்பதில்லை
துன்பம்தந்தகாலத்தை மறந்துவிடுதலில் தீமையில்லை
அவைகற்றுத்தந்த பாடத்தை மறந்துவிட்டால் உயர்வில்லை
அனுபவங்களை மறந்துவிட்டால் உனக்கு வெற்றியில்லை.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan