28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவா சிவதர்சன்
வாரம் 203
“மார்கழி”
வருடம்,மாதங்கள் இயற்கயின் பருவகாலக் கோலங்கள்
மழையும் குளிரும் மிகுந்த மாரி உலகை வருத்தும் காலங்கள்
முடிவு தரும் மார்கழி-சீதேவியின் பிறப்பால் வரும் மாற்றங்கள்
தாங்கொணா துன்பங்கள் தாங்கிய மகிழ்வால் துள்ளும் உள்ளங்கள்
மண்ணீரம் காக்கும் பயிர் வளம் பெருக்கும் உயிருக்கு உணவூட்டும்
வாழவளங்கொடுக்கும் மார்கழி,பெற்றதாயை நினைவூட்டும்
சுனாமியும் சூறாவளியும் மார்கழியில் சீற்றத்தை நிலைநாட்டும்
குற்றம் புரிந்தவர் சுற்றமானாலும் நிச்சயம் தண்டிப்பை அறிவூட்டும்
திருப்பள்ளிஎழுச்சி பாடி இறைவனை துயிலெழுப்புவதும் மார்கழியே
திருவெம்பாவை இசைத்து மங்கையர் நலம் பேணுவதும் மார்கழியே
ஒருவனே தேவன் என உணர்ந்த நத்தார் கொண்டாடுவதும் மார்கழியே
மானுடபேதங்கள் மறைந்துபோக நல்வழி பல காட்டும் மார்கழி மாதாவே நீயென்றும் வாழியவே!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...