மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 181
“ஆடிப்பிறப்பு”

ஈழத்தமிழர் கூழ்குடித்து கொழுக்கட்டை தின்று
கூடி மகிழும் பெரு விழா ஆடிப்பிறப்பு
கருக்கூட்டும் மாரிக்கு கால் கோள்போடும் ஆடிமாதம்
ஆடி மழை தேடி உழும் ஈழத்துக் கமக்காரன்.

ஆடிபிறந்தவுடன் உணவு இருப்பை உயர்த்தமுயலும்
இம்பருலகில் இருக்கும் அப்பா இனிதாய் இருக்க நினைவூட்டும்
ஆடி அமாவாசை சிரார்த்தம் செய்யும் அன்பு மகன்
வேற்றினத்தில் காணாத தனித்துவமான பாரம்பரியம்.

ஆடிக்காற்று சுழன்றடித்தால் ஊழிக்காற்றது திண்ணம்.
அராஜகம் எல்லாம் அழித்துச்செல்லும் ஆடித்தாயவள்
இந்த ஆடியிலும் எமை மீட்டாய்,எம் தலைகள் ஒன்றுசேரா
எம்தலைகள் ஒன்றிணைய வசியம் ஏதும் காண்பாய் தாயே.!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading