” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 184
“கோலுயர நாடுயரும்”

சோறுண்டு சுகமுண்டு நேற்றுவரை எம்நாட்டில் வளமான வாழ்வுண்டு
இல்லாத பொருளெல்லாம் இறக்குமதி,எமக்கென்ன குறையுண்டு?
கையிலே காசிருந்தால் கடையிலெல்லாம் வாங்கலாம்
திறந்த பொருளாதாரம் திட்டமில்லா அரசாங்கம்

உற்பத்தி கைவிட்டோம் உழுதுண்டு வாழ்தலில் ஊக்கமிழந்தோம்
பண்டமில்லா பண்டசாலைகள் விண்ணைமுட்டும் விலைவாசி
இயன்றளவு சுருட்டிய ஆட்சியாளர் தப்பியோடி தலைமறைவு.
எரிபொருளில்லை, உணவு மின்சாரம் போக்குவரத்து இருட்டடிப்பு

திறைசேரி காலி அந்நியச்செலாவணி அதலபாதாளம்
உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும், நம்பி உதவ ஞாலத்தில் எவருமிலர்.
ஆட்சி மாறவில்லை அதிகாரம் மாறியது அலிபாபா கையில்
அரசியல் பிழைத்தால் அறமே கூற்றாகும்,வறுமையை விதைத்தால் பட்டினிச்சாவே அறுவடையாகும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan