” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 186
“முதிமையை மதிப்போம்”

சின்னஞ்சிறுவனாய் இன்று நீ துள்ளிக்குதிக்கின்றாய்
காலத்தின் வேகத்தில் முதுமையை நீ காண்பாய்
நாள்,வாரம்,மாதம்,வருடம் என ஓடி மறைவதை உணர்வாய்
வளர்ச்சியடைவாய் இயற்கையின் நியதியைப்புரிவாய்

புரியாதபுதிர்கள் பலகாலங்காட்டும்,புரிந்து கொள்வாய்
வளைந்த வில்போல் கூனிச்செல்லும் முதியோரை காண்பாய்
காவோலை விழச்சிரிக்கும் குருத்தோலையாய் நகைப்பாய்
உனக்கு அந்நிலை வரும்போது அன்று நீ வருந்துவாய்

பூவாகிப்பிஞ்சாகி காயாகிக்கனியாகி மண்ணில் விழ்தல் அறிவாய்
வேலாய் நிமிர்ந்து நின்றவன் கூனி வளைதல் முதிர்ச்சியின் விதி என்பால்
எல்லோர்க்கும் இதுவே விதி எமக்கும் அதுவே கதி எனதெளிவாய்
முதியோரை மதித்தல் எமது தலையாய கடன் என்பதை நம்புவாய்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan