கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 243 ]
“பிறந்த மனை”

எங்ஙனம் உரைப்பேன் என் பிறந்த மனையின் பெருமைதனை?
மாடமாளிகையுமில்லை,கூடகோபுரமுமில்லை,
கூப்பிட்ட குரலிற்கு ஏவல் செய்ய, அங்கு சேவகருமில்லை
ஒற்றை அறை விறாந்தையுடன் வெறும்சுண்ணாம்பு மனை

அம்மையும் அப்பனும் பிள்ளைகளுடன் எழுவர் ஒன்றாய் வாழ்ந்தகாலம்
உள்ளதையுண்டு உலாவி மகிழ்ந்து உறங்கியதொரு பொற்காலம்
வேற்றுமையங்கில்லை, அன்பெனுமூற்று உள்ளத்தில் நிறைந்துபாயும்
அந்த நாள் ஞாபகங்கள் நெஞ்சிலே வந்துபோக கண்ணீர் தாரையாகும்

யுத்தத்தால் இடம் பெயர வெறுமனையான தெங்கள் பிறந்த மனை
பெற்றதாயும் பிறந்த மனையும் மனதிலென்றும் நீங்காதகவலை
பிறந்த மனைகளை இழந்த தமிழர்நிலை சொல்லிப்புரிவதில்லை
பிறந்த சொந்த மனையிலே தமிழனுக்கு வாழச்சுதந்திரமில்லை.

“பிறந்த மனையை எண்ண எண்ண நெஞ்சம் பொறுக்குதில்லையே”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading