” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 251 ]
“மாசி”

மாதங்களில் நாட்குறைந்து நலிந்துபோன மாசியே!
நான்காண்டுகளில் ஒருநாள் மட்டும் வளர்கின்றாய் மாசியே!
சிறுமியானாலும் சிறப்பாய் வந்து செல்கிறாய் மாசியே!
தொடர்மாரிக்குளிர் நீங்க வெப்பமூட்டுகிறாய் மாசியே!

வேளாண்மை முடிந்தும் மாற்றுப்பயிரேற்றி மகிழும் மாசியே!
பூத்துக்குலுங்கும் பயிர்களை வெகுபொலிவாய் காட்டுவாய் மாசியே!
பொய்மழையில் பூக்கள் கழுவுண்டுபோனால் கதறித்துடிப்பாய் மாசியே!
பின்னால்வரும் வசந்தம்உணர்ந்து பூரிப்படைவாய் மாசியே!

சிவனார்க்கு சிவராத்திரி கொண்டாடி மகிழ்வாய் மாசியே!
மகநட்சத்திரப் பெருவிழாவால் மகிமை பெற்றாய் மாசியே!
காதலர் தினம் கொண்டாடி முழுஉலகுக்கே இன்பமூட்டுகிறாய்.மாசியே!
உலகம் உன்னைப்போற்றி மகிழ்கிறது உவகைகொள்வாய் மாசியே!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan