மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவா சிவதர்ஷன்

வாரம் 204

*”குழந்தை”*

நிறைவாகவே செய்தனை இறைவா! நின்படைப்பில் குறையேதுமில்லை
நிறையும் குறையும் குழந்தை வளரும் சூழலே எல்லை
மழைத்துளி மண்ணைத்தொடும்வரை காத்திருக்கும் தாய்மை
மண்ணின் மாசுடன் கலந்து குணம்மாறுதல் இயற்கை

பிறப்பு முதல் இறப்புவரை மனிதவாழ்வில் பலபருவம்
மாசறு வெள்ளை உள்ளங்கொண்ட பொற்காலம் குழந்தைப்பருவம்
அன்னை மடியில் ஊட்டும் அமுதுடன் ஒழுக்கமும் அறிவும் இணையும்
ஐந்தில் பெற்ற அறிவே ஒருவனை ஆயுள் முழுவதும் உயர்த்தும்

பசுமரத்தாணிபோற் பதிந்திடும் இளமையிற்கல்வி
பெரியோரைப் பேணலும் நல்லொழுக்கமும் பெருக்கிடச்செல்லும் பள்ளி
மதிப்பின் பெருமையும் அவமதிப்பின் சிறுமையும் அடைந்ததை எண்ணி
மனதில் அமைதி நிலவிடும் நற்குழந்தையின் விருத்தி.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading