முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 215
விடியல்

எங்கள் ஈழதேசம் அழகின் அழகு
விடிகாலைப் பொழுது அழகோ அழகோ
கடற்கரையோரம் கண்விழிக்கும் நேரம்
கதிரவன் கதிர்கள் கண்னிற்கு விருந்து
உடல் நலம் காக்கும் அருமருந்து
உலகிற்கு இயற்கை தந்த வரமாகும்

கோயில் மணியோசை காதோரம்
வண்டுகள் இசைத்திடும் ரீங்காரம்
பூக்களும் மலர்ந்து புன்னகை செய்யும்
புல்வெளி எங்கும் பனித்துளி மின்னும்
வயல்வெளி எங்கும் நெற்கதிர்கள் தலைசாய்க்கும்
மனமெங்கும் ஏகாந்தம் நிறைந்திருக்கும்

தினம் தினம் புதுவிடியல்
ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள்
ஆழ்மனதில் தீராத ஏக்கங்கள்
விடியவில்லையே எங்கள் தேசம்
விடிந்தும் விடியாத பொழுதுகளாய்
நாட்கள் நகர்கின்றன
நாளை விடியுமென்ற நம்பிக்கையில்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading