” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சுமித்திராதேவி சதீஸ குமார்

கைக்குள் கையாய் கைத் தொலைபேசி

உலகை உள்ளங் கையில் தந்தாய்
உறவுகளை மறக்க செய்தாய்
உயிரே போனாலும் உன்னை
உழாவுவதை மறக்க செய்யேன்

மணிக் கனக்காய் உன்னோடு வாழ்கிறேன்
கண் விழித்ததும் உன்னை தேடுகிறேன்
கண்ணெதிரே நீ இல்லையேல் வாடுகிறேன்

முகமறியா உறவுகளை
முன் வந்து நிறுத்தினாய் – என்
மூத்தோர் முதியோர்களை மறக்க செய்தாய்
காதலும் தந்தாய்
கவிதையும் தந்தாய்
கண்கள் இரண்டையும்
காயம் செய்தாய்

தொலை தூர நட்பை தேட செய்தாய்
தொன்மை நட்பை மறக்க செய்தாய்
பாட்டும் தந்தாய் கதையும் தந்தாய்
பாட புத்தகத்தை மறக்க செய்தாய்

உலக செய்தி தந்தாய்
உள்ளூர் செய்தி தந்தாய்
பத்திரிகை தோழனை பார்க்காமல் இருக்க செய்தாய்
கண்ணிமைக்காமல் உன்னை பார்க்க செய்தாய் – என்
கற்பனை திறனை மறக்கடித்தாய்…

இன்னும் செய்தாய்
என் இமைகளை
மூட மறுக்க செய்தாய்….!

-: சுமித்திராதேவி சதீஸ குமார்
– இலங்கை.
– ⁠(அறிமுகம் ஜெயா நடேசன்).

Nada Mohan
Author: Nada Mohan