நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சுமித்ரா தேவி

கவி இலக்கம் 2
தமிழ் மொழி
அழகின் குரலாய் ஒலிக்கும்
ஆண்டவன் தந்த சுவையே
காதல் செய்ய
கவிதை தந்தவளே
கனவிலும் தவழும் உணர்வே
இதயம் கவர்ந்த
இன்னிசை மொழியே
கார் குழலின் காவிய இசையே
காதல் மடலாய் பிறக்கும் கவியே
தெவிட்டா தேனாய் இனிப்பாய் நீயே
தென்றலாய் நீயும் வந்தாய் இங்கு
கவிஞனாய் என்னை உயிர்பித்தாய் நீயே
தமிழ் தான் உன்‌ அழகிய பெயரோ
சுமித்ரா தேவி
‌‌‌‌ கொழும்பு

Nada Mohan
Author: Nada Mohan