” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

செ.தெய்வேந்திரமூர்த்தி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் – 219
தலைப்பு:-
ஆற்றல்
“””””””
ஆற்றல் வேண்டும் அவனியில் வாழ
ஆசை கொள்வாய் அதனையும் தேட
போற்றும் கல்விப் புகழினைக் காணப்
பொய்யா துளைப்பாய் பொலிந்திடும் ஆற்றல்
ஏற்றம் அடைய தெஃகெனும் மேனி
என்றும் துணையாம் ஏற்றுநீ வெல்வாய்
சீற்றம் வேண்டாம் சிதைந்திடும் சிந்தை
செம்மை உள்ளம் செருக்கினை ஓட்டும்!

அன்னை தந்தை அவர்தரும் ஆசி
ஆர்வம் கூட்டி அறிவினைத் தேக்கும்
பின்னம் காட்டா துறவுகொள் நட்பு
பின்நாள் வந்தே உதவிடும் பாராய்
மன்னும் துன்பம் மகத்துவப் பாடம்
மண்ணில் காண்பார் மனத்தெழும் ஆற்றல்
அன்பில் மூழ்கா அகத்துறை எண்ணம்
என்றும் நன்றாய் இலங்குமா சொல்வீர்
உள்ளத் தாற்றல் உயரிய உண்மை
ஓர்மம் கொண்ட உழைப்பினில் காட்டு
பள்ளம் பாய்ந்து பரவிடும் நீரின்
பாயும் ஆற்றல் பலமுடை நோக்கே
கள்ளம் வேண்டாக் கடிதுறு ஞாலம்
காலங் பார்க்காக் கருத்தினை நல்கும்
அள்ளக் குன்றா அறிவுடை மக்கள்
ஆற்றல் தானே அனைத்தையும் ஆளும்!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
15/04/2023.

Nada Mohan
Author: Nada Mohan