” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

நாதம்
———
கோவிலில் கோபுரம் ஓங்கியே நிற்கும்
காண்டா மணியும்
நாதமாய் ஒலிக்கும்
கண்ணில் காணா கடவுள் கூட
காற்றில் கலந்தே மனதுள்
நுழைவார்

நல்லூர் கந்தனும் காற்றோடு வருவார்
மணியின் நாதமாய்
விடியல் தருவார்

ஓங்கார தீபம் ஓமெனும் பிரணவம்
மேளம் தாளம் பேரிகை முழக்கம்
ஒலியின் அலைகள் காட்சியாய் நிலைகள்

கல்லறை வீரரும் துயிலினைத் துறந்திட
மணியின் நாதமும் ஓங்கியே ஒலிக்கும்

மனுவின் ஆட்சியில் நீதியும்
கலந்திட
கன்றும் சேயும் சமமென்றாகிட
மணியின் நாதமே
ஆதாரம் ஆனது

நாதம் நம்மை பிணைத்தே வைக்குது
கவியாய் இசையாய் வானலையில் கலக்குதே!

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan