மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜயமுனமலர் இந்திரகுமார்

நினைவுடன் வாழ்தல்

எம் தேசத்து மல்லிகை செம்மண் பிடியொடு
புலம்பெயர் தேசம் வந்ததிங்கே

பிஞ்சுக்கொடியது
குளிரையும் கண்டது
கண்டதும் விறைப்புடன்
வீட்டினுள் நுழைந்தது
நுழைந்த மல்லிகையால்
என் தேசத்து மல்லிகையின் நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன்

பின்னலிடை மின்னலாய் சூடிய பூக்களையும் அறிவேன்
சரமாய் தொடுத்திட்ட மாலையும் அறிவேன்

காலை விடியலால் மொட்டும் மலர்ந்தது
அமாவாசை இருளிலும் தன்வசம் ஈர்த்தது

எத்தனை மலர்கள் பூத்துக் குலுங்கின
அத்தனையும் எண்ணியதை
அறியேன் அப்போது
அவையாவும் இப்போது
மனக்கண்ணில் குவிகின்றன

கோடைகால வெயிலும்
வந்ததிங்கே
என் தேசம் என்றெண்ணி
அதுவும் மகிழ்ந்தது
மல்லிகை மொட்டும் முகிழ்த்து வந்தது
எண்ணிப் பார்க்கிறேன்
ஏகமாய் ஓர் மலர்
மாலை இருளும் சூழ்த்திட
மலரும் வீழ்ந்தது

வீழ்ந்த மலரினை கையில்
ஏந்தினேன்
ஏகமாய் ஓர் மலர்
ஏந்திய ஏந்தலில் மல்லிகை
வாசனை
என் தேசமெல்லாம் படர்ந்தது

அன்று எண்ணா மலர்களை-இன்று
என் கண்முன்னே எண்ணுகின்றேன்
அது அருமை பெருமை என்பதாலோ
மலரா மல்லிகை மனதுள்
மலர்ந்தது
ஜமுனா மலரில்
கலந்து கொண்டது
இதுவும் இங்கே ஓர் வாழ்வியலானது

நன்றியுடன் ஜமுனாமலர்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading