” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-26

30-01-2024

மாசி

மாசிமாத மகத்துவம் நீ யோசி
மன வலிமை நிறையவே நேசி
கலை, கல்வி கற்கவும், பல காரியமும் பன்மடங்கு பெருகுமாம் அனுகூலமும்

சிவத்தோடு சக்தி இணைவரே
மகாசிவராத்திரியும் இதுவே
மாங்கல்ய மாதமும் இவரே
அம்பிகை வழிபட இல்லறம் அமையும்

மகா சங்கடஹர சதுர்த்தி
போக்கிடும் சங்கடங்களை
மாசி பெளர்ணமி
சிறந்திடும் தர்ப்பணத்திற்கு

ஏகாதசி அருளிடும் நற்கதி
மாசிமக நற்பேறு பெற கடலில் நீராடு
முழு மாசியும் அருளிடும் இறைவழிபாடு
இதுவே அளித்திடும் நிறை வாழ்வு.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan