திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-33
23-04-2024

நேரம்

உயர்ந்தவன், தாழ்ந்தவன்,ஏழை, பணக்காரன் யாவர்க்கும் நேரமொன்று
மழுங்கிய கத்தியை முன்னமே தீட்டிடு திட்டமிட்டு நேரத்தை நீயும் சேமித்திடு

காற்றைப் பிடிக்க முயல்வது போல
வேலையென வேளை முழுதும் திரியாது
மன அமைதிக்கும் கொஞ்சம்
கொடுத்திடு உன் நேரத்தினை

ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கொண்டு
நேரத்தை கொஞ்சம் ஒதுக்கிடு நீயும்.
மன அழுத்தமும் அகன்றிடுமே
பொன்னான வாழ்க்கை நிலைத்திடுமே

நேரத்துடன் செய்யும் காரியம்
சிறப்பாய் கைகூடுமே
தாமதமான காரியம் கொஞ்சம்
மறதியும் கொண்டு சேருமே

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading