திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-39
04-06-2024

பெண்ணே

பெண்ணே விடுகதையா நீ??
தாய்மைக்கு கிடைத்த வரமா நீ??
புன்சிரிப்பு கொண்டவளே…
புன்னகையெனும் முகமூடி போலியென
உன் நகை குறுநகை புரிவது தெரிகிறதா??

குடும்பம் தழைக்க உரமிடுபவளே
குத்துவிளக்காய் ஒளி தருபவளே
மெழுகுவர்த்தியாய் உருகுபவளே
பொன்னைப் போல தரம் உயருபவளே
பூவைப் போல மென்மையானவளே

வலிகள் என்பது வளப்படுத்தவல்லவா
கனவு கண்டு, முயன்று நீ
முன்னேறிடு பெண்ணே
தினம் தினம் சில நிமிடம்
உனக்காய் ஒதுக்கிடு கண்ணே!

வரும் தடையனைத்தும்
படி தாண்டிப் பறந்திடும் பெண்ணே
முயற்சியை மூச்சாய் சுவாசித்து
உனை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு பெண்ணே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading