” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பாட்டி

அம்மாக்கு நிகர் மண்ணில் எவராவார்
அம்மம்மா இரண்டாம் தாய் அவராவார்
எத்தனையோ சொல்லலாம் அவரைப்பற்றி
வற்றிவிடா நினைவுகளாய் மனதைச் சுற்றி

கேட்டுக்கொண்ட உபகதைகள் ஞாபகத்தில் இன்றும்
பாட்டுப்பாடி உரைத்ததெல்லாம் மறக்காது என்றும்
ஊட்டிவிட்டே வளர்த்தார் செய்ததெல்லாம் நன்மை
வீட்டுக்கு காவலாளியாய் இருந்தாரென்பதே உண்மை

கொட்டைப்பாக்கு சுண்ணாம்போடு வெற்றிலையை இடிப்பார்
கொட்டிவிடாது ஒருகையால் அணைத்துமே பிடிப்பார்
குந்திக்கொண்டு இருந்தே  இடம்பெறும் நிகழ்ச்சி
சிந்திடாது  இடித்து காண்பாரே மகிழ்ச்சி

ஜஞ்சம் இனிப்பு வாங்க கேட்டதும்
கொஞ்சம்பொறு மகனேயென கொட்டப்பட்டியை திறப்பதும்
ஒரிசம் இரண்டீசமாக பத்தீச்சம் கிடைப்பதும்
புரியாத ஆனந்தத்துடன் கடையை அடைவதும்

ஆயிரம் உறவுகளுள் உயர்வானவர் பொக்குவாய்க்கிழவி
தாயினும் தாயான கொசுவ சேலையழகி
அன்று தெரியவில்லை இவரன்பு பெறுமதியென
இன்று தெரிகின்றது இவரொரு  வெகுமதியென

ஜெயம்
11-07-2023

Nada Mohan
Author: Nada Mohan