” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பணம்

இதுவன்றி ஓரணுவும் அசையாதென்பது மெய்
இதைத்தேடியே ஓடி உருக்குலைகின்றது மெய்
காலங்கள் எல்லாம் விரயமாவதும் எதனாலே
கோலத்தைக் கரைத்து ஓடுவதும் இதனாலே

மதிப்பையும் மரியாதையையும் அளவிடும் சாதனம்
அன்பையும் அற்பமாக்கிடும் அச்சடித்த காகிதம்
நீதியையும் இது விலைகொடுத்து வாங்கும்
பாதி மனிதாக ஆக்கிவிட்டே நீங்கும்

பாதாளம் வரை பாயும் வேதாளம்
தாராளமாக்க இதைத் தேடுபவர் ஏராளம்
உலக இலட்சியமே இதைச் சேர்ப்பதே
தலைகுப்புற தள்ளினாலும் அதனால்தான் மீட்பதே

பணம் இல்லையேல் வாழ்வே மாயம்
தினமும் ஏற்படுமே மனதில் காயம்
இது இல்லாதவன் சமமாவான் பிணத்திற்கு
அது கொண்டுவந்தது கொண்டாட்டத்தை பணத்திற்கு

ஜெயம்
09-04 -3024

Nada Mohan
Author: Nada Mohan