மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நேரம்

நேரம் சரியில்லையென வேலையை தள்ளிப்போடாதே
தூரம் போனதெல்லாம் திரும்பியுந்தான் வாராதே
நிற்காமல் ஓடும் கடிகாரத்தை பாராயோ
உற்சாகத்தோடு வருந்தடை உடைத்து மீறாயோ

காலமதை வீணாக்கி ஆயுளும் கழிவதா
கோலமதன் செயலிழப்பில் மெய்யறிந்து முழிப்பதா
இருபத்துநான்கு மணிநேரமும் இயற்கையின் வரம்
வரும்நொடிகள் ஒவ்வொன்றையும் பற்றட்டுமே கரம்

சூரியன் நேரம்பார்த்தா வானில் உதிக்கிறது
பாரின் செயலினிலே ஒய்வின்மை தெரிகிறது
பஞ்சபூதங்களும் விடுமுறை எடுக்காதே செயல்புரிகின்றன
பஞ்சிப்படாது இயங்கியே பயன்களை குவிக்கின்றன

இனியாவது பழிபோடாது ஆற்றுவோம் கடமை
கனிந்துவிடும் நேரம் அகற்றிவிடு மடமை
நேரம்பாரா செயல்பாடே வாழ்க்கையின் சிறப்பு
நேரமில்லையென புலம்புவோரும்
அறியவேண்டுமிதன் மதிப்பு

ஜெயம்
23-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading