மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 605
உழைப்பு

உழைப்பு என்பது மொத்தத்தில் சிறப்பு
உழைப்பு அதில் காட்டக்கூடாது வெறுப்பு
உழைப்பு உயர்வாழ்க்கையின் வாயிலின் திறப்பு
உழைப்பால் வந்திடும் சமுதாயப் பொறுப்பு

உழைப்பில்லா பிறப்பு மூச்சிருந்தும் பிணம்
உழைப்பைத் தவிர்ப்பவர் சோம்பலின் இனம்
உழைப்போரே மேலோர் வாய்ப்புகள் கைகுலுக்கும்
உழையாது உட்காந்தோரை காலமும் எள்ளிநகைக்கும்

உழையாது கழிப்போர்க்கு என்றுமேயில்லை மன்னிப்பு
உழைப்பொன்றாலே வாழ்க்கையில் கிடைக்கும் பூரிப்பு
உழைப்பால் உண்டாகும் ஆயுளுக்கும் சுறுசுறுப்பு
உழைப்பு இதுதானென கற்றுக்கொடுக்குதே எறும்பு

உழைப்பிற்கு உறவாகும் உலகத்துப் பரப்பு
உழைப்பை நோக்கியே உள்ளத்தைத் திருப்பு
உழைப்பால் வாழ்க்கையில் வருமொரு பிடிப்பு
உழைப்பாலே உண்டாகும் பற்பல படைப்பு

ஜெயம்
01/05/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading