நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

விழிப்பு

தூங்கிய உணர்வுகள் மெல்லவே விழிக்கட்டும்
ஊக்கம் வாழ்க்கைக்குள் பொங்கியே வழியட்டும்
தினக்காட்சிகள் நிகழட்டும் இயற்கைக்குள் உட்பட்டு
மனச்சாட்சி உருவாக்கட்டும் இதற்கான படிக்கட்டு

எது வேண்டுமென்றாலும் நடப்பது நடக்கட்டும்
அது அது அப்படியே கிடக்கட்டும்
என்பதான ஊரோடு ஒட்டாத மணப்பாங்கு
மண்ணுலக வாழ்க்கைக்கு செய்கின்ற தீங்கு

மயக்க நிலையது தொடர்வது வீனென்று
சுய உணர்வுடன் இருத்தலும் நன்று
உணர்வதன் சரியான உண்மையான கலையது
மனமது பழகாது தவிர்த்திடின் பிழையது

அறியவேண்டியதை அறியாமலிருப்பது அறியாமையின் பக்கம்
தெரிந்துகொண்டபின் மாறாமல் இருப்பதும் வெட்கம்
கவனிக்க வேண்டியவற்றை கவனிப்பதே நலம்
அவனியில் விழிப்புடன் இருக்கவேண்டாமோ மனிதகுலம்

ஜெயம்
05-05-2024

Nada Mohan
Author: Nada Mohan