” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

விழிப்பு

தூங்கிய உணர்வுகள் மெல்லவே விழிக்கட்டும்
ஊக்கம் வாழ்க்கைக்குள் பொங்கியே வழியட்டும்
தினக்காட்சிகள் நிகழட்டும் இயற்கைக்குள் உட்பட்டு
மனச்சாட்சி உருவாக்கட்டும் இதற்கான படிக்கட்டு

எது வேண்டுமென்றாலும் நடப்பது நடக்கட்டும்
அது அது அப்படியே கிடக்கட்டும்
என்பதான ஊரோடு ஒட்டாத மணப்பாங்கு
மண்ணுலக வாழ்க்கைக்கு செய்கின்ற தீங்கு

மயக்க நிலையது தொடர்வது வீனென்று
சுய உணர்வுடன் இருத்தலும் நன்று
உணர்வதன் சரியான உண்மையான கலையது
மனமது பழகாது தவிர்த்திடின் பிழையது

அறியவேண்டியதை அறியாமலிருப்பது அறியாமையின் பக்கம்
தெரிந்துகொண்டபின் மாறாமல் இருப்பதும் வெட்கம்
கவனிக்க வேண்டியவற்றை கவனிப்பதே நலம்
அவனியில் விழிப்புடன் இருக்கவேண்டாமோ மனிதகுலம்

ஜெயம்
05-05-2024

Nada Mohan
Author: Nada Mohan