திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

விடியுமா தேசம்

ஆணவம் பொங்கிவழியும் அதிகார தேசம்
ஆனதெல்லாம் அங்கே ஆயுதங்களே பேசும்
வலிகளுக்குள்ளே வழியை தேடிய இனமொன்று
வலிந்தவர் பிடியகற்றி விடுதலையாவது என்று

விடியல் என்பது ஆதவனால் கிழக்கில்
விடியவில்லை இதுவரைக்கும் ஈழத்து கிழக்கில்
அவராட்சி இவராட்சி முன்னேற்றமில்லை வடக்கில்
எவராட்சி வந்தாலும் சர்வாதிகாரிகளே தெற்கில்
அளவில்லா இயற்கை கொடைகளின் எல்லை
வளங்கள் பலவிருந்தும் நாட்டுப்பற்றுடன் மக்களில்லை
ஏலம்விட்டே நாட்டை அரசியல்வாதிகள் பிழைப்பார்கள்
ஆலம்விழுதெனச்சொல்லி பிற நாட்டவரும் நுழைவார்கள்

இரு இனத்துக்குள்ளே பிரச்சினையை உருவாக்கி
பெரும் சொத்தைச்சேர்க்க அதையே கருவாக்கி
சிங்களம் செய்யும் சித்து விளையாட்டு
எங்களில் சிலரும் அதற்கு தலையாட்டு

இனியும் பிரிவினை இலங்கையருள் எதற்கு
தனித்தனியாய் இருப்பதனால் தீர்ந்திடாது வழக்கு
சீனாவென்றும் இந்தியாவென்றும் எங்களை ஆளுவதா
வீணான வேற்றுமையுணர்வால் துர்ப்பாக்கியம் நீளுவதா

ஜெயம்
23-09-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading