” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பிரிவு துயர்

மண்ணுடன் உடல் உறவை முடிக்கும்
புண்ணுடலின் உயிரைக் காலன் குடிக்கும்
ஞாலம் தங்காத தற்காலிக வசிப்பு
காலனை நினைத்தாலே விட்டுப்போகுமே இரசிப்பு

பெற்றோரால் வையகத்தில் எதற்காக பிறப்பு
கற்பூர பொம்மையாய் உருவத்தின் இருப்பு
அழகான தேகம் அழுகியே போகும்
பழகிய வாழ்க்கையும் காணாமல் ஆகும்

சொத்தெங்கே சுகமெங்கே போகுமிடம் தானெங்கே
சுத்தமாய் வேடமதை களைக்கவரும் நாளிங்கே
வாழ்க்கையெனும் நாடகத்தை அரங்கேற்றிய மேடை
வீழ்த்திவிட்டு அழவைத்து ஏற்றிவிடும் பாடை
தாமரைமேல் நீர்த்துளி போல உள்ளநிலை
யாவருமே மாட்டிடுவார் இந்த விதியின்வலை

பிரிவு துயர் ஒருநாள் வந்துவிடும்
சரியும் உடலை தீயும் சுட்டுவிடும்
அழைப்பு மணியடித்தால் கதவைத் திறக்கவேண்டும்
பிளைப்பு நிரந்தரமில்லை விடைபெற வேண்டும்

ஜெயம்
26-06-2022

Nada Mohan
Author: Nada Mohan