மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பிரிவு துயர்

மண்ணுடன் உடல் உறவை முடிக்கும்
புண்ணுடலின் உயிரைக் காலன் குடிக்கும்
ஞாலம் தங்காத தற்காலிக வசிப்பு
காலனை நினைத்தாலே விட்டுப்போகுமே இரசிப்பு

பெற்றோரால் வையகத்தில் எதற்காக பிறப்பு
கற்பூர பொம்மையாய் உருவத்தின் இருப்பு
அழகான தேகம் அழுகியே போகும்
பழகிய வாழ்க்கையும் காணாமல் ஆகும்

சொத்தெங்கே சுகமெங்கே போகுமிடம் தானெங்கே
சுத்தமாய் வேடமதை களைக்கவரும் நாளிங்கே
வாழ்க்கையெனும் நாடகத்தை அரங்கேற்றிய மேடை
வீழ்த்திவிட்டு அழவைத்து ஏற்றிவிடும் பாடை
தாமரைமேல் நீர்த்துளி போல உள்ளநிலை
யாவருமே மாட்டிடுவார் இந்த விதியின்வலை

பிரிவு துயர் ஒருநாள் வந்துவிடும்
சரியும் உடலை தீயும் சுட்டுவிடும்
அழைப்பு மணியடித்தால் கதவைத் திறக்கவேண்டும்
பிளைப்பு நிரந்தரமில்லை விடைபெற வேண்டும்

ஜெயம்
26-06-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading