” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

நட்பென்றால்

ஒத்த உனர்வுடன் செயற்படும் குணங்கள்
சுத்தத்தின் மொத்தமும் இருந்திடும் மனங்கள்
நித்தமும் ஒருவரோடொருவராய் பிரியாத கணங்கள்
மித்திரன் அருகிலே மெய்ப்படாதோ தினங்கள்

ஒரு வயிற்றில் பிறக்கவில்லை இருந்தும் பரிவு
உறவுகளுள் உன்னதவுறவு வருமோவங்கு பிரிவு
எந்தநிலை வரினும் கோர்த்த விரல்கள் கோர்த்தவைதான்
சொத்தாய் நண்பன் இருக்கையிலே கவலையும் ஏன்

பனித்துளி போன்றிருப்பார் சொந்தங்கள் வடிவில்
தனித்துவமாய் தோழனோ அவர்களின் நடுவில்
இறக்கும் வரைக்கும் பிரிக்கமுடியாத ஒன்று
சிறப்பாக வாழுவோம் நட்பினைக் கொண்டு

ஜெயம்
23-07-2022

Nada Mohan
Author: Nada Mohan