மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கனவு நிஜப்படுமோ

எல்லைமீறி மனதில் புதைத்த ஆசைகள்
தொல்லைதந்தே உள்ளத்து உள்ளிருந்து ஓசைகள்
சொல்லிமுடியாது தினமும் காணும் கனவுகள்
அள்ளியதை எடுத்து அசைபோடுமே நினைவுகள்

கனாக் காணவென வந்துகொண்ட பருவம்
வினாக்கு விடைதேடி அலைந்துவிடும் உருவம்
பினாத்திக்கொண்டு பித்துப் பிடித்தநிலை புரிந்திருந்தும்
அனாதையாக்கிவிடும் கூடாவிட்டால் சொந்தங்கள்  அருகிருந்தும்

பலித்திடாதோ விழிமூடிக் காணுகின்ற சொப்பனங்கள்
வழிந்துவிட தினத்திற்குள் உவகையின் கணங்கள்
களிகூரக் கண்டவைகள் நிகழ்ந்திடவே நேரில்
வழிவிட்டு நிகழ்த்திடாதோ விதியதுவும்  பாரில்

ஜெயம்
22/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading