” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கனவு நிஜப்படுமோ

எல்லைமீறி மனதில் புதைத்த ஆசைகள்
தொல்லைதந்தே உள்ளத்து உள்ளிருந்து ஓசைகள்
சொல்லிமுடியாது தினமும் காணும் கனவுகள்
அள்ளியதை எடுத்து அசைபோடுமே நினைவுகள்

கனாக் காணவென வந்துகொண்ட பருவம்
வினாக்கு விடைதேடி அலைந்துவிடும் உருவம்
பினாத்திக்கொண்டு பித்துப் பிடித்தநிலை புரிந்திருந்தும்
அனாதையாக்கிவிடும் கூடாவிட்டால் சொந்தங்கள்  அருகிருந்தும்

பலித்திடாதோ விழிமூடிக் காணுகின்ற சொப்பனங்கள்
வழிந்துவிட தினத்திற்குள் உவகையின் கணங்கள்
களிகூரக் கண்டவைகள் நிகழ்ந்திடவே நேரில்
வழிவிட்டு நிகழ்த்திடாதோ விதியதுவும்  பாரில்

ஜெயம்
22/11/2022

Nada Mohan
Author: Nada Mohan