” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நினைவுநாள்

தாயகத்திற்காய் அற்பணித்தாரே தம் வாழ்நாளை
நாயகர்கள் அவர்களை நினைவுகூரும் புனிதவேளை
காயங்கொண்ட நினைவுகளுடன் விடியினும் அக்காலை
தூயவர்கள் அவர்களிற்கு சூட்டிடுவோம் புகழ்மாலை

கனவு நிரம்பிய உறங்கா விழிகளோடு
உணவு இன்றி பசித்தே வழிகளூடு
இனத்திற்க்காய் பட்டனர் சீவனழிக்கும் சிலுவைப்பாடு
கணக்கில்லா துன்பங்கள் சூழ்ந்ததன்றோ அவரோடு
ஈராயிரமாம் ஆண்டிலே சரித்திரம் படைத்தவர்
போராயிரம் செய்தே வெற்றிகள் அடைந்தவர்
தீராதென்றும் ஞாபகம் வரமாகக் கிடைத்தவர்
மாறாது உள்ளுணர்வு அவர் எமக்காயுடைந்தவர்

28-11-2022

Nada Mohan
Author: Nada Mohan