” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 638

சுதந்திரமாமே

மனிதனை மனிதன் வகைதொகையின்றி அழிப்பது
தாராள சுதந்திரத்தின் வெளிப்பாடே
துணிந்து செய்யும் பாலியல் வன்முறை
அதுவும் இதனூடான செயற்பாடே
தனியொருவன் நினைப்பதை பேசியும் நிகழ்த்தியும்
மனம்போன போக்கெல்லாம் சுதந்திரமாமே
புனிதராய் துதிக்கவேண்டிய தாயையும் தந்தையையும்
தள்ளி வைப்பதும் இதற்காகத்தானே

கலாசாரத்துள் புதிய வரவுகளின் வருகை
கோலத்தின் காட்சியும் மாறியது
விழாவென வந்தால் குடியும் குத்தாட்டமும்
சுதந்திரம் சக்கைபோடு போடுகின்றது
குலாவி மகிழும் மானிடக் கூட்டத்தில்
சுதந்திரக் காற்றின் சுவாசிப்பு
இலாபம் என்றே பழக்கத்தில் மாற்றம்
தங்கியில்லாத தாராள வாழ்வாம்

இயற்கைக்கு முரணாக புதுமையின் படைப்புகள்
கவலைக்கிடமான பழமையும் பாரம்பரியமும்
செயற்கையாய் இஷ்டப்படி நாகரீக அவதாரங்கள்
தைரியமாச் செய்யும் பாவங்கள்
பயனென தலைமுறை களித்து வாழ்க்கையை
பஞ்சமற்ற சுதந்திரத்திடம் தஞ்சம்
நிஜமாக நிம்மதி உற்பத்தி செய்யப்படுகின்றதா
தங்காநிலை வாழ்விற்கு சுதந்திரமாமே

ஜெயம்
02-02-2023

Nada Mohan
Author: Nada Mohan