” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

kavi 641
மொழியின்றி வாழ்வில்லை

ஜெகமெங்கினும் தாய்மொழி நாள் கொண்டாட்டம்
அகத்தியன் கண்ட மொழியிங்கு அமுதாட்டம்
அகரத்தில் தொடங்கி முடிகின்றவரையில் சுகமூட்டும்
சிகரத்தையடைய கூடவே இருந்து வழிகாட்டும்

சொற்களின் சாலம் மயங்கவே வைக்கும்
கற்கண்டாய் இனிக்கும் கேட்டாலே காதோரம்
பற்பல மொழிகளும் அகிலத்தில் இருக்கலாம்
நற்றமிழ் போல இனிமையைத் தருமோ

பெற்றோர்கள் காட்டி வரவான மொழி
கற்றிடக் கற்றிட தரமாக்கும் மொழி
வற்றாது வழங்கும் கொடையான ஜீவநதி
இற்றைவரைக்கும் கொண்ட வாழ்க்கையின் விதி

எங்கு சென்றாலும் நிழலாகத் தொடருமே
அங்கும் என் சுவாசத்தை நிரப்புமே
மங்காத ஞானத்தை ஆயுளுக்கும் கொடுக்குமே
பங்கெடுத்து வாழ்க்கையில் என்றுமெனை ஆளுமே

பெயர்தந்து பெருமைதந்த அருமையினை மறப்பேனா
அயல்மொழியை உயிர்மொழிக்குள் நுழையவுந்தான் விடுவேனா
உயர்வானதே நம்மொழி சூரியனாய் உதிக்கும்
தயக்கமில்லை தலைமுறைகள் சிந்தைதனில் பாதிக்கும்

அழகான தாய்மொழியை பெற்றதனால் மகிழ்ச்சியே
பழகிவிட பழகிவிட புத்தியிலும் வளர்ச்சியே
அளப்பெரிய பாக்கியமே தமிழினத்தில் பிறந்தது
உளம்நிறைந்த வாழ்க்கைக்கு செம்மொழியே சிறந்தது

இதுவரைக்கும் வழிநடத்தி சென்றாயம்மா நன்றி
அதுவரைக்கும் பாடிடுவேன் என்றுமுனை போற்றி
முதுமையிலும் முதுமொழியே பசியதனை தீர்க்கும்
புதுமைகளின் நாயகியே பூவுலகில் வாழிநீவாழி

ஜெயம்
22-03-2023

Nada Mohan
Author: Nada Mohan