” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நீர்க்குமிழி

வையகத்தில் நம்வாழ்வு நீர்க்குமிழி போலே
மெய்யதுவும் பொய்யதுவாய் நிலையில்லை என்பதனாலே
செய்துவிடு மானிடனே நன்றுதனை மண்மேலே
கையகப்படுத்தியதும் நம்கூட வராது அதனாலே

பூட்டிவைத்து மூச்சுக்காற்றை காப்பவர்தான் யாரிங்கே
பூத்ததெல்லாம் வாடியது உதிர்ந்துவிடும் பாரங்கே
போட்டுவிட்டால் உடைந்துவிடும் மண்பானை எனவிங்கே
ஆட்டிப்படைத்தது அடங்கிவிடும் புரிந்திடின் குழப்பமெங்கே

இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது
வந்தவர் நிலைக்கவில்லை கண்கூடான சான்றது
விந்தையான படைப்பெனவே மனிதகுலம் தோன்றுது
தந்துவிட்டு பறிப்பதற்கே விதியதுவும் ஈன்றது

அற்பமும் இதுவாக அற்புதமும் இதுவாக
பற்றிப்பிடித்தாலும் தள்ளிவிடும் ஒருநாள் அதுவாக
இற்றைவரை புரியாத பொருளெனவே உண்மையதுவாக
சற்றும் எதிர்பாராதே நொறுங்கிவிடும் பொம்மையதுவாக

ஜெயம்
24-03-2023
https://linksharing.samsungcloud.com/jRzy3wI7RZjF

Nada Mohan
Author: Nada Mohan