மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நீர்க்குமிழி

வையகத்தில் நம்வாழ்வு நீர்க்குமிழி போலே
மெய்யதுவும் பொய்யதுவாய் நிலையில்லை என்பதனாலே
செய்துவிடு மானிடனே நன்றுதனை மண்மேலே
கையகப்படுத்தியதும் நம்கூட வராது அதனாலே

பூட்டிவைத்து மூச்சுக்காற்றை காப்பவர்தான் யாரிங்கே
பூத்ததெல்லாம் வாடியது உதிர்ந்துவிடும் பாரங்கே
போட்டுவிட்டால் உடைந்துவிடும் மண்பானை எனவிங்கே
ஆட்டிப்படைத்தது அடங்கிவிடும் புரிந்திடின் குழப்பமெங்கே

இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது
வந்தவர் நிலைக்கவில்லை கண்கூடான சான்றது
விந்தையான படைப்பெனவே மனிதகுலம் தோன்றுது
தந்துவிட்டு பறிப்பதற்கே விதியதுவும் ஈன்றது

அற்பமும் இதுவாக அற்புதமும் இதுவாக
பற்றிப்பிடித்தாலும் தள்ளிவிடும் ஒருநாள் அதுவாக
இற்றைவரை புரியாத பொருளெனவே உண்மையதுவாக
சற்றும் எதிர்பாராதே நொறுங்கிவிடும் பொம்மையதுவாக

ஜெயம்
24-03-2023
https://linksharing.samsungcloud.com/jRzy3wI7RZjF

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading