மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 649

வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது

தாயிடம் கேட்காமலே கிடைப்பது
தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது
உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும்
இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும்

நட்பின் தரையில் முளைக்கும்
காதலும் ஒன்றுவிடாமல் சேமிக்கும்
உளங்கொண்டவர் உடல் அழகாகும்
உண்மையில் கொண்டால் பாக்கியமாகும்

உலகத்திலே உயர்ந்த பரிசு
அகிலத்தில் விலை மதிப்பில்லாதது
எதையும் எதிர்பாராமல் கொடுப்பது
பகிர்ந்து கொண்டால் ஊறுவது

இனம் மொழி அறியாதது
இரக்கம் கருணையின் தாயகமானது
உண்மையானது எவரையும் ஏமாற்றாதது
வாழ்வின் அடிப்படையின் அடக்கமானது

இதன் இராட்சியத்தில் சந்தோசமே
இதன் வெளிப்பாடு பரிசுத்தமே
கொண்டாடப்பட வேண்டிய ஒன்று
புண்ணியம் இதுவென என்று

ஜெயம்
19-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading