” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம்-19.12.2023
கவி இலக்கம்-246
நிலாவின உலா
—————-
வெள்ளி நிலாவே
உன் அழகுதான் என்னே. கவிஞர்கள் கற்பனையில் பெண்களை
அழகுற ஒப்பிட்டு. உலகிற்கு கவி படிக்கிறார்களே. உன்னை நினைத்து. மங்கையர்களும் மனதார காதலாகி கசிந்து உருகி உருகி. கனவு காண்கிறார்களே. அண்ட வெளியின் அரசியே. அழகாய் நீ அண்ட வெளியில் அப்பளமாய். அந்த மாலையில் காட்சி தருவாயே
அம்மா உன்னை கண்ணாடியில் காட்டி அமுது ஊட்டினை மறக்க முடியுமா. காதலர் பலர் கடற்கரையில். கண்டு கவிதை வடித்து. அழகு படுத்தியதை.
பாலன் ஜேசு பிறந்த இடம் இடையர்களுக்கு வழி காட்டி
கூட்டி சென்றதை மறக்க முடியுமா
விண்வெளி விஞ்ஞானிகளை வரவளைத்து
உன்னை உலகத்திற்கே
முத்திரை பதித்ததை மறக்க முடியுமா
உன்னை எட்டி பிடித்து விளையாட நினைத்து நினைத்து எனக்கும் வயதாகி போகுதே
நீ அங்கே இரு இந்த நாட்டில் உன்னைப் பார்த்து
மகிழ ஒளிந்து விட்டாய்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan