” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.07.2023
இலக்கம்-228
பாட்டி
—————
ஒளவைப் பாட்டி அமுதாய் பொழிந்தா அமுத மொழிகள்
அம்மா தந்த பாட்டி
வடை சுட்ட கதை அழகாய் கூறும்
தெய்வ பாட்டி
மானிப்பாயில் பிறந்து
நெடுந்தீவில் வளர்ந்து
பிரிந்து
எம்மோடு கூட இருந்து
வாழ்ந்த பாட்டி
சேலைத் தலைப்பினிலே சில்லறை முடித்து வைத்து
தோடம்பழ இனிப்பு வாங்க 5,10 சதம் தந்திட்ட பாட்டி
தலைவாரி பின்னி விட்டு அழகு பார்த்து சிரிக்க
விழுந்து விழுந்து சிரித்து மகிழும் பாட்டி
கொட்டை பெட்டியில் தாம்பூலம் வைத்து
வெற்றிலை காம்பு முறித்து சப்ப தந்த பாட்டி
பஞ்சுத் தலையை முழுக வைத்து ஈரம் துடைத்து
வெள்ளை உடை அணிந்து மகிழ்வு அடைந்த பாட்டி
கடைசி வரை அன்புடன் வாழ்ந்து ஆறுதலாய் அடங்கிய பாட்டி
இறைவன் அடியில் அமைதியில் உறங்கும் பாட்டி
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan