தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தொடரும் நகர்வு

புதிய வருடம் பிறந்தாச்சு
பழைய தொழில் துறை தொடராச்சு
பூஜை விளக்கு ஒளி தன்னிலே
மகிழ்ச்சி பெட்டகம் நிறைவாச்சு

உற்றார் சுற்றார் நினைப்போடு
பொங்கல் தினமும் பிறப்பேடுக்கும்
புது பானை தேடும் விழியோடு
தாய் நிலை நினைப்பு வழிகிறது

வரவும் செலவும் ஒரு பக்கம்
ஏற்ற தாழ்வு மறு பக்கம்
பொங்கல் என்றதும் புது பொழிவு
பொங்கிடும் நினைவை நமக்கெல்லாம் தந்திடும்
ஆதவன் அடி பணிவோம்!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading