நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தினம்தினமாய்…

வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்—-
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்

வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து செலுத்தும் படகிலே
நிறைந்து நிமிரும் வியர்வையே
நித்தம் நடத்தும் உடல்சமர்

வரவு செலவுப் பயணியாய்
வருமானம் ஈட்டும் தேனீயாய்
உழைப்பின் உரமே உன்னதம்
உலக விழிப்பின் உயர்தினம்

மேதினம் மேதினி ஆள்கையில்
மேன்படும் வர்க்கமே விழித்தெழு
யாழினில் குரலிசை மீட்டிடும்
நரம்புகள் புடைக்கும் நம்பிக்கை
உழைப்பே உயர்வின் முதற்படி
உலகை ஆளும் திறன்வழி. நன்றி

Nada Mohan
Author: Nada Mohan