” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தினம்தினமாய்…

வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்—-
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்

வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து செலுத்தும் படகிலே
நிறைந்து நிமிரும் வியர்வையே
நித்தம் நடத்தும் உடல்சமர்

வரவு செலவுப் பயணியாய்
வருமானம் ஈட்டும் தேனீயாய்
உழைப்பின் உரமே உன்னதம்
உலக விழிப்பின் உயர்தினம்

மேதினம் மேதினி ஆள்கையில்
மேன்படும் வர்க்கமே விழித்தெழு
யாழினில் குரலிசை மீட்டிடும்
நரம்புகள் புடைக்கும் நம்பிக்கை
உழைப்பே உயர்வின் முதற்படி
உலகை ஆளும் திறன்வழி. நன்றி

Nada Mohan
Author: Nada Mohan