நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தியாகதீபம் 70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-09-2025

தியாகதீபமே திலீபன் அண்ணா
நீரின்றி, உணவின்றி
நீவிர், பட்டினியால்
உயிர் துறந்த உத்தமனே!

தன்னினம் பகைவனால் அழிய
1987 செப்டம்பர் 15ம் நாள்
நல்லைக் கந்தனின் முன்றலிலே உண்ணாநிலைப் போராட்டம்

தியாகத்தின் வலியை
தீர்க்கமாய் உணரா அரசு
உண்மை உரையை செவி
எடுக்கா இதயங்கள்.

1987ம் ஆண்டு செப்டம்பர்
26ம் நாள் சனிக்கிழமை தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள்,

தாகத்தோடு போராடி
தியாகத் தீயாய் நீ மாறி,
அகிம்சை வழியில்
அணைந்தாயே

சரித்திரத்தில் உன் பெயர்
சமாதியாய் பதித்தாயே.
இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..

Jeba Sri
Author: Jeba Sri