கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

தியாகதீபம் 70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-09-2025

தியாகதீபமே திலீபன் அண்ணா
நீரின்றி, உணவின்றி
நீவிர், பட்டினியால்
உயிர் துறந்த உத்தமனே!

தன்னினம் பகைவனால் அழிய
1987 செப்டம்பர் 15ம் நாள்
நல்லைக் கந்தனின் முன்றலிலே உண்ணாநிலைப் போராட்டம்

தியாகத்தின் வலியை
தீர்க்கமாய் உணரா அரசு
உண்மை உரையை செவி
எடுக்கா இதயங்கள்.

1987ம் ஆண்டு செப்டம்பர்
26ம் நாள் சனிக்கிழமை தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள்,

தாகத்தோடு போராடி
தியாகத் தீயாய் நீ மாறி,
அகிம்சை வழியில்
அணைந்தாயே

சரித்திரத்தில் உன் பெயர்
சமாதியாய் பதித்தாயே.
இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading