” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தியாக தீபமிவன்

இரா.விஜயகௌரி
வாழ்வுச் சுழல் அலையும்
வைகறை எதிர்நீச்சல்
திசைகொள் எதிர் மறைகள்
தீர்க்கவொண்ணா பெருஞ்சமர்கள்

தாய்த்தமிழும் தாய்மண்ணும் -ஊன்
உடம்பினுள்ளே தகித்தெழுத
வேர்தாங்கும் விழுதானான் -அவன்
விசைதாங்கும் படகானான்

உயிர்க்கூட்டை தாங்கி நின்று
ஊன் வதைத்து போர் விதைத்து
விடுதலைத்தீயை அவன்
அகிம்சை வழி விதைத்தெழுந்தான்

தீபத்தின் ஒளிச்சுடராய் – வாழ்வை
தந்தே தாய் மண்மடியை. காக்க
நமக்காக நமக்காக தாய்மொழிகாக்க
உயிர்தந்த மகன்நினைவு சுமந்தெழுவோம்

Nada Mohan
Author: Nada Mohan