” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தியாக தீபம் திலீபன்

நகுலா சிவநாதன்
தியாக தீபம் திலீபன்

நல்லுர்ரின் முன்றலிலே உயிர்த்தியாகம்
நாம் பார்க்க எழுந்ததே உண்ணா நோன்பு
கல்லூரி படிக்கையிலே கண்டுகொண்டோம்
கண்ணீரும் விட்டழுதோம் கலங்கியே போனோம்

விடுதலையின் தீயாக எழுந்தான்
விண்ணதிர ஆறுநாள் நோன்பானான்
கடுகதியாய் மக்களும் புடைசூழ வந்தனர்
கண்ணீரும் கம்பலையும் தீயாக மாறியது

நீர் கூட அருந்தாது நீர்செய்த தியாகம்
தார்மீகத் தமிழுக்கும் ஆகுதியானதோ!
தியாகத்தின் செம்மலே தீரமானஉன்தியாகம்
வீர வரலாறு ஆகிப்போனதே!

நகுலா சிவநாதன் 1821

Nada Mohan
Author: Nada Mohan