திருமணமா

செல்வி நித்தியானந்தன்

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிர்ணயம்
ஆன்றோர்வாக்கு

இருமனங்கள்
ரொக்கத்தில்
இணைப்பது
இன்றையநோக்கு

இருவர் ஒன்றித்து
வாழ்ந்த காலம்
ஒருவரை முறித்து
வாழும் கோலம்
இளசுகள் இப்போ
தனிமை வாழ்வு
பளசுகள் போல
பதிலடி நோவு

விருப்பம் மட்டும்
வினாவாய் தோன்றும்
விடைகாண முடிவும்
விரிசலாய் போகும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading