” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

10.01.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 205
விருப்புத் தலைப்பு !
“தாயே தமிழ்த்தாயே போற்றி” 🙏🌷

தமிழ்மகனை தரணிக்கு
தந்த தாயே
அமிழ்து மொழியினை
அடுக்கிபேச கற்றுத்தந்தாயே //

முத்தமிழ் பெற்றெடுத்த
முக்கனி சொற்சுவையே
இத்தரணி தமிழ்கமழ
இதயத்தாய் வைத்தாயே//

அல்லும் பகலும்
அயராது தமிழுக்கே
சொல்லாலும் செயலாலும்
சொல்லித் தந்தாயே //

எத்துணை தமிழ்ப்பற்றை
எண்ணிநீர் விதைத்தீரோ
அத்துணை அறுவடையும்
அன்புஇளையோர் இடம்தாயே //

என்னதவம் செய்தீரோ
என்றும்மை பெருமைசெய்யும்
நன்னெறி மகவொன்றை
நற்றமிழுக்காய் ஈன்றதாயே //

புலிபரல் தங்கிச்சென்ற
புன்னிய கற்க்குகையே
வலிமை வித்திட்டு
வழித்தடம் வகுத்தாயே //

நின்புகழ் பாடிட
நித்தமும் பெருமிதமே
என்தாயாய் எண்ணியே
ஏற்றுகிறேன் தீபமே //

நன்றி 🙏🌷🌷🌷🌷
கவிஞர் பாவை …அண்ணா அவர்களின்…..
கவிப்பார்வை , தட்டிக்கொடுப்புக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்🙏

Nada Mohan
Author: Nada Mohan