” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி .அபிராமி கவிதாசன்.

29.06.2022
சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 179
கவித்தலைப்பு !
“ பிரிவு துயர்”
பிரியா வரம்வேண்டும்
பெருங்கொடுமை பிரிவுதுயர்
பிரிந்திட இழந்திடும்
பிள்ளைகளின் துடிக்கும்உயிர் //

கண்களுக்குள் வைத்திருந்த
களையாத ஓவியம்
மண்ணுக்குள் மறைந்தன
மனிதஇனக் காவியம் //

நினைந்து நினைந்து
நித்தமும் தேடியும்
வினைமுடிந்து மீண்டெழுந்து
வீடுவரா ஓடின //

உறவாடி மகிழ்ந்தயுள்ளம்
உயிரைத்தேடி ஏங்கின
பிறந்திடவேண்டுஎன்
பிள்ளையென தாங்கிட //

ஓயாது ஒலித்தகுரல்
ஓசையற்று உருகியதே
தீயான ஒளிதீபம்
திரியற்று கருகியதே //

உறவினுள் பகைத்தஉயிர்
உலகினை துறந்திடவே
இறந்த செய்தியின்பின்
இதயம் திறந்தனரே //

உருவமற்ற உலகினிலே
உலாவரும் என்மனமோ
அருவியாகி விழிகளும்
அன்பாலே புண்மனமே //

நன்றி வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan