28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
திருமதி .அபிராமி கவிதாசன்.
29.06.2022
சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 179
கவித்தலைப்பு !
“ பிரிவு துயர்”
பிரியா வரம்வேண்டும்
பெருங்கொடுமை பிரிவுதுயர்
பிரிந்திட இழந்திடும்
பிள்ளைகளின் துடிக்கும்உயிர் //
கண்களுக்குள் வைத்திருந்த
களையாத ஓவியம்
மண்ணுக்குள் மறைந்தன
மனிதஇனக் காவியம் //
நினைந்து நினைந்து
நித்தமும் தேடியும்
வினைமுடிந்து மீண்டெழுந்து
வீடுவரா ஓடின //
உறவாடி மகிழ்ந்தயுள்ளம்
உயிரைத்தேடி ஏங்கின
பிறந்திடவேண்டுஎன்
பிள்ளையென தாங்கிட //
ஓயாது ஒலித்தகுரல்
ஓசையற்று உருகியதே
தீயான ஒளிதீபம்
திரியற்று கருகியதே //
உறவினுள் பகைத்தஉயிர்
உலகினை துறந்திடவே
இறந்த செய்தியின்பின்
இதயம் திறந்தனரே //
உருவமற்ற உலகினிலே
உலாவரும் என்மனமோ
அருவியாகி விழிகளும்
அன்பாலே புண்மனமே //
நன்றி வணக்கம் 🙏
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...