” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -217.
“தவிப்பு”

தவியாய் தவித்து தவமிருந்தேன்
தாயுடன் தந்தையுடன்
துணையாக தங்கிட
தவறியதால் //

புவியினில் புன்னகை பூவாக பூத்திட்ட
புனித பொக்கிச பிறப்பிடப் பந்தமே //

செவிகுளிர செந்தமிழில் சொந்தமுடன் பேசிமட்டுமே
செவ்விதழ் சொன்னதுவே சமாதான சம்மதம்//

பவித்திர பந்தமுடன்
பாசமுடன் பாங்குடன்
பழகிட பகிர்ந்திட பக்கத்தில் பாதகமே //

வருத்தம் வந்து
வதைத்து வாட்டுமே
வழியில்லை வெளியிடவும் வருந்தி வாடுதே//

திருமதி.அபிராமி கவிதாசன்.

Nada Mohan
Author: Nada Mohan